யாழ் நெடுந்தீவுப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 119.7 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கடும் மழையின் தாக்கத்தினால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் உறவினர்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed